தேவைப்படும் நிலையில் பணப்புழக்கத் தட்டுப்பாட்டை போக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாக அதன் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை மேலும் கூறியதாவது: பொருளாதாரத்தில் பணப்புழக்க நிலவரம் குறித்து ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் பணப்புழக்கமானது நல்ல நிலையிலேயே உள்ளது. தேவையை ஈடு செய்யும் வகையில் ரொக்க இருப்பு உள்ளது. பொருளாதாரத்தில் பணப்புழக்க தட்டுப்பாட்டை போக்க வேண்டிய சூழல் ஏற்படும் நிலையில் தக்க நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும் என்றார் அவர்.