தனியார் துறையைச் சேர்ந்த ஃபெடரல் வங்கியின் லாபம் மூன்றாவது காலாண்டில் 28 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்த அந்த வங்கி செபி-க்கு வியாழக்கிழமை அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ஃபெடரல் வங்கியின் மொத்த வருவாய் ரூ.3,299.96 கோடியாக அதிகரித்து காணப்பட்டது. கடந்த நிதியாண்டின் இதே கால அளவில் வருவாய் ரூ.2,729.83 கோடியாக மட்டுமே காணப்பட்டது.
நிகர லாபம் ரூ.260 கோடியிலிருந்து 28 சதவீதம் அதிகரித்து ரூ.333.63 கோடியானது.
மொத்த வாராக் கடன் விகிதம் 2.52 சதவீதத்திலிருந்து அதிகரித்து 3.14 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் விகிதம் 1.36 சதவீதத்திலிருந்து உயர்ந்து 1.72 சதவீதமாகவும் இருந்தது என ஃபெடரல் வங்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.