நாட்டின் முன்னணி ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களுள் ஒன்றான எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் புதிய பிரீமியம் வசூல் டிசம்பருடன் முடிவடைந்த ஒன்பது மாத காலத்தில் 32 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கடந்த 2018 டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த ஒன்பது மாத காலத்தில் புதிய வணிக பிரீமியம் வசூல் ரூ.9,470 கோடியாக இருந்தது. கடந்தாண்டு இதே காலத்தில் ஈட்டிய வசூலான ரூ.7,200 கோடியுடன் ஒப்பிகையில் இது 32 சதவீதம் அதிகம்.
கூடுதல் கவனம் செலுத்தி வருவதையடுத்து, பாதுகாப்பு பாலிசிகள் மூலமாக ஈட்டப்பட்ட புதிய வணிக பிரீமியம் வசூல் 170 சதவீதம் உயர்ந்து ரூ.1,060 கோடியை எட்டியுள்ளது. தனிநபர் புதிய பிரீமியம் வசூல் ரூ.5,790 கோடியிலிருந்து 14 சதவீதம் அதிகரித்து ரூ.6,600 கோடியை எட்டியுள்ளது.
டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த ஒன்பது மாதங்களில் நிறுவனத்தின் நிகர லாபம் 13 சதவீதம் உயர்ந்து ரூ.860 கோடியைத் தொட்டுள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் இறுதி நிலவரப்படி நிறுவனம் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.1,11,630 கோடியிலிருந்து 20.2 சதவீதம் அதிகரித்து ரூ.1,34,150 கோடியை எட்டியுள்ளது எனஎஸ்பிஐ லைஃப் தெரிவித்துள்ளது.