சார்டட் ஸ்பீடு நிறுவனத்தின் ரூ.273 கோடி மதிப்பிலான பொதுப் பங்கு வெளியீட்டு திட்டத்துக்கு செபி அனுமதியளித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் கூறியுள்ளதாவது:
பொது பங்கு வெளியீட்டு திட்டத்துக்கு அனுமதி கோரி கடந்த 2018 செப்டம்பரில் செபி-யிடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. அதற்கான அனுமதியை செபி தற்போது வழங்கியுள்ளது.
புதிய பங்குகளை வெளியிடுவதன் மூலம் ரூ.225 கோடியும், ஓஎஃப்எஸ் முறையில் மேம்பாட்டாளர் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ.48 கோடியும் திரட்டிக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
மேம்பாட்டாளர் பங்கு விற்பனையைப் பொருத்தவரையில், பங்கஜ் குமார் காந்தி மற்றும் அல்கா பங்கஜ் காந்தி ஆகியோருக்கு சொந்தமான தலா ரூ.24 கோடி மதிப்பிலான பங்குகள் விற்பனை செய்யப்படவுள்ளன என்று சார்டட் ஸ்பீடு தெரிவித்துள்ளது.