இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதன் பணியாளர்களுக்கு பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் ரூ.217 கோடியை திரட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்ட பத்திரிகை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது:
இஎஸ்பிஎஸ் எனப்படும் பணியாளர்கள் பங்குகள் வாங்கும் திட்டம் கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி தொடங்கப்பட்டு 2019 ஜனவரி 21-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. ரூ.11.90 தள்ளுபடி விலையுடன் கூடிய இந்த திட்டத்தில் 18.24 கோடி பங்குகள் வரை வேண்டி பணியாளர்கள் விண்ணப்பித்தனர். இதன் மூலம் வங்கி ரூ.217 கோடியை திரட்டியது.
பொதுத் துறை வங்கிகளிலேயே, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மட்டும்தான் இஎஸ்பிஎஸ் திட்டத்தில் 100 சதவீத பங்குகள் முழுவதையும் 92 சதவீத பணியாளர்களுக்கு விற்பனை செய்துள்ளதாக அந்த வங்கி தெரிவித்துள்ளது.