ஏறுமுகத்தில் பாசுமதி ஏற்றுமதி

இந்திய பாசுமதி அரிசியின் ஏற்றுமதி மதிப்பு கடந்த 2018-19-ஆம் நிதியாண்டில் ரூ.32,804.30 கோடியாக உயர்ந்துள்ளது.
ஏறுமுகத்தில் பாசுமதி ஏற்றுமதி


இந்திய பாசுமதி அரிசியின் ஏற்றுமதி மதிப்பு கடந்த 2018-19-ஆம் நிதியாண்டில் ரூ.32,804.30 கோடியாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
பாசுமதி அரிசியின் ஏற்றுமதி மதிப்பு கடந்த 2017-18-ஆம் நிதியாண்டில் ரூ.26,870.17 கோடியாக இருந்தது. 
இது, கடந்த 2018-19-ஆம் நிதியாண்டில் ரூ.32,804.30 கோடியா உயர்ந்துள்ளது.
அதற்கு முந்தைய 2016-17-ஆம் ஆண்டில் ரூ.21,512.91 கோடி மதிப்பிலான பாசுமதி அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது.
நடப்பு நிதியாண்டில், கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூ.3,206.08 கோடி மதிப்பிலான பாசுமதி அரிசி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது என்று அந்த புள்ளிவிவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com