இந்திய பாசுமதி அரிசியின் ஏற்றுமதி மதிப்பு கடந்த 2018-19-ஆம் நிதியாண்டில் ரூ.32,804.30 கோடியாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
பாசுமதி அரிசியின் ஏற்றுமதி மதிப்பு கடந்த 2017-18-ஆம் நிதியாண்டில் ரூ.26,870.17 கோடியாக இருந்தது.
இது, கடந்த 2018-19-ஆம் நிதியாண்டில் ரூ.32,804.30 கோடியா உயர்ந்துள்ளது.
அதற்கு முந்தைய 2016-17-ஆம் ஆண்டில் ரூ.21,512.91 கோடி மதிப்பிலான பாசுமதி அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது.
நடப்பு நிதியாண்டில், கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூ.3,206.08 கோடி மதிப்பிலான பாசுமதி அரிசி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது என்று அந்த புள்ளிவிவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.