அந்நியச் செலாவணி கையிருப்பு 42,767 கோடி டாலராக புதிய உச்சம் 

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூன் 28-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 42,767 கோடி டாலராக (ரூ.29.93 லட்சம் கோடி) அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியது.
அந்நியச் செலாவணி கையிருப்பு 42,767 கோடி டாலராக புதிய உச்சம் 

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூன் 28-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 42,767 கோடி டாலராக (ரூ.29.93 லட்சம் கோடி) அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியது.
 இதுகுறித்து ரிசர்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
 இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூன் 28-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 126 கோடி டாலர் (ரூ.8,820 கோடி) அதிகரித்து 42,767 கோடி டாலரை எட்டியுள்ளது. அந்நியச் செலாவணி கையிருப்பு இந்த அளவுக்கு புதிய உச்சத்தை தொட்டிருப்பது இதுவே முதல்முறை.
 இதற்கு முந்தைய வாரத்தில் அந்நிய செலவாணி கையிருப்பு 421 கோடி டாலர் உயர்ந்து 42,641 கோடி டாலராக காணப்பட்டது. ஒட்டு மொத்த செலாவணி கையிருப்பில் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு மதிப்பீட்டு வாரத்தில் 125 கோடி டாலர் அதிகரித்து 39,990 கோடி டாலராக இருந்தது.
 அதேசமயம், தங்கத்தின் கையிருப்பு மாற்றம் எதுவுமின்றி 2,295 கோடி டாலர் என்ற அளவிலேயே உள்ளது.
 சர்வதேச நிதியத்தில் எஸ்டிஆர் 30 லட்சம் டாலர் அதிகரித்து 145 கோடி டாலராகவும், நாட்டின் கையிருப்பு நிலை 70 லட்சம் டாலர் உயர்ந்து 336 கோடி டாலராகவும் உள்ளது என புள்ளிவிவரத்தில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
 அந்நிய நிதி நிறுவனங்களின் முதலீட்டு வரத்து அதிகரிப்பு, ரூபாயின் நிலைத்தன்மை ஆகியவற்றின் காரணமாக அந்நியச் செலாவணி கையிருப்பு புதிய உச்சத்தைத் தொட்டு சாதனை படைத்துள்ளது.
 தற்போதுள்ள 42,800 கோடி அந்நியச் செலாவணி இந்தியாவுக்கு 10 மாதங்களுக்கு தேவையான இறக்குமதியை பூர்த்தி செய்ய போதுமானதாக இருக்கும் என்று சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com