பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி

இந்தியப் பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாக சரிவைச் சந்தித்தன. இதில் மும்பை பங்குச் சந்தை இந்த ஆண்டின் இரண்டாவது பெரிய வீழ்ச்சியை எதிர்கொண்டது.
பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி

இந்தியப் பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாக சரிவைச் சந்தித்தன. இதில் மும்பை பங்குச் சந்தை இந்த ஆண்டின் இரண்டாவது பெரிய வீழ்ச்சியை எதிர்கொண்டது. கடந்த இரு நாள்களில் பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ரூ.3.79 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் வெள்ளிக்கிழமை 560.45 புள்ளிகள் சரிந்து 38,337.01 என்ற அளவில் நிலைகொண்டது. இது 1.44 சதவீத சரிவாகும். தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 177.65 புள்ளிகள் குறைந்து 11,419.25 புள்ளிகளானது. இது 1.53 சதவீத சரிவாகும். இதற்கு முன்பு கடந்த 8-ஆம் தேதி மும்பைப் பங்குச் சந்தையில் ஒரே நாளில் 792.82 புள்ளிகள் வீழ்ந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com