வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநர் (டிஜிஎஃப்டி) அலோக் வரதன் சதுர்வேதியின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்ததது.
இதுகுறித்து மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:.வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநராக உள்ள அலோக் வர்தன் சதுர்வேதியின் பதவிக் காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் வரும் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வரையில் அப்பதவியில் இருப்பார் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிகார் மாநிலத்திலிருந்து 1986-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரியான சதுர்வேதி, வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகத்தின் தலைமை இயக்குநராக உள்ளார்.