கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் மாருதி சுஸுகியின் ஈக்கோ அறிமுகம்

 மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் பன்முக பயன்பாட்டு வாகனமான  ஈக்கோ கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் செவ்வாய்க்கிழமை


 மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் பன்முக பயன்பாட்டு வாகனமான  ஈக்கோ கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
இதுகுறித்து அந்த நிறுவனம் செபியிடம் தெரிவித்துள்ளதாவது:
பின்பக்கம் பார்க்கிங் சென்ஸார் வசதி, இணை ஓட்டுநருக்கான சீட் பெல்ட்டை நினைவூட்டும் வசதி உள்ளிட்ட பல கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள  ஈக்கோ வாகனத்தில் இடம்பெற்றுள்ளன.
இவைதவிர, வேக எச்சரிக்கை கருவி, ஏபிஎஸ் எனப்படும் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், ஏர்பேக் உள்ளிட்ட வசதிகளும் இப்புதிய வாகனத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. புதிய வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதால் இந்த வாகனத்தின் விலை மாடல்களுக்கு ஏற்ப ரூ.400 முதல் ரூ.23,000 வரை அதிகரிக்கும் என்று மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com