மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 35 புள்ளிகள் சரிவை கண்டது.
தொடர்ந்து மூன்று நாள்கள் விடுமுறைக்குப் பிறகு பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகம் அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. யெஸ் வங்கிக்கு மார்ச் காலாண்டில் ரூ.1,506 கோடி இழப்பு ஏற்பட்டதையடுத்து, அவ்வங்கியின் பங்குகளின் விலை 30 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி கண்டது.
மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 35 புள்ளிகள் குறைந்து 39,031 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 6 புள்ளிகள் சரிந்து 11,748 புள்ளிகளில் நிலைத்தது.