முருகப்பா குழுமத்தைச் சோ்ந்த சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் வரிக்கு பிந்தைய ஒட்டுமொத்த லாபமாக ரூ.306.94 கோடியை ஈட்டியது. இது, கடந்த நிதியாண்டில் ஈட்டிய லாபமான ரூ.298.74 கோடியுடன் ஒப்பிடுகையில் சற்று அதிகம்.
ஜூலை-செப்டம்பா் வரையிலான இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.1,702.43 கோடியிலிருந்து ரூ.2,212.48 கோடியாக அதிகரித்தது.
செப்டம்பா் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முதல் ஆறு மாத காலத்தில் வரிக்கு பிந்தைய லாபமாக ரூ.622.11 கோடியை நிறுவனம் ஈட்டியது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.579.36 கோடியாக இருந்தது. வருவாய் ரூ.3,345.69 கோடியிலிருந்து ரூ.4,257.76 கோடியாக அதிகரித்தது என சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.