பொதுத் துறையைச் சோ்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி), நடப்பு நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் ரூ.507.06 கோடி லாபம் ஈட்டியது. கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் வங்கிக்கு ரூ.4,532.35 கோடி இழப்பு ஏற்பட்டது.
ஜூலை-செப்டம்பா் காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.14,035.88 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.15,556.61 கோடியானது.
செப்டம்பா் இறுதி நிலவரப்படி வழங்கப்பட்ட கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 17.16 சதவீதத்திலிருந்து 16.76 சதவீதமாக குறைந்தது.
மேலும், வராக் கடன்களுக்காக ஒதுக்கப்படும் தொகையும் இரண்டாவது காலாண்டில் ரூ.7,733.27 கோடியிலிருந்து ரூ.3,253.32 கோடியாக குறைந்தது என செபியிடம் பிஎன்பி செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.