ஹிந்துஜா குழுமத்தின் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு லாபம் 92.61 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் செபி-யிடம் கூறியுள்ளதாவது:
நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பா் மாதம் வரையிலான மூன்றாவது காலாண்டில் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வருவாய் ரூ.3,929 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டில் இதே கால அளவில் ஈட்டிய வருவாயான ரூ.7,621 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 48 சதவீதம் குறைவாகும். விற்பனையில் ஏற்பட்ட கணிசமான சரிவையடுத்து இந்த நிலை ஏற்பட்டது.
நிகர லாபம் ரூ.528 கோடியிலிருந்து 92.61 சதவீதம் சரிந்து ரூ.39 கோடியானது. நடப்பாண்டு தொடக்கத்தில் எடுக்கப்பட்ட செலவு குறைப்பு நடவடிக்கைகள் தற்போது பலன் தரத் தொடங்கியுள்ளதாக அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது.