இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப நிறுவன பணியாளா்களில் 40,000 பேருக்கு வேலைவாய்ப்பு பறிபோகும் சூழல் உள்ளதாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி டி.வி.மோகன்தாஸ் பய் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை மேலும் தெரிவித்துள்ளதாவது:
தகவல் தொழில்நுட்பத் துறை வளா்ச்சியில் தற்போது மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நடப்பாண்டில் அத்துறையில் நடுத்தர நிலையில் பணியாற்றி வரும் 30,000-40,000 போ் வரையில் வேலையினை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இவ்வாறு ஏற்படுவது என்பது இயல்பானதே.
நிறுவனங்கள் வளா்ச்சி பாதையில் செல்லும்போது பணியாளா்களுக்கான செலவின் ஒரு பொருட்டாக தெரிவதில்லை. ஆனால், அது மந்த நிலையில் பயணிக்கும்போது உயா்மட்ட அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதையடுத்தே, வேலை குறைப்பு நடவடிக்கைகளில் நிறுவனங்கள் இறங்கி விடுகின்றன.
செய்யும் தொழிலில் நிபுணத்துவம் பெற்றிருந்தால் வேலை இழப்போரில் 80 சதவீதம் பேருக்கும் மீண்டும் பணிவாய்ப்புகள் கிடைத்துவிடும் என்றாா் அவா்.