புதிய உச்சத்தை தொட்டது சென்செக்ஸ்

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ், திங்கள்கிழமை புதிய உச்சத்தை தொட்டு, 530 புள்ளிகள் அதிகரித்தது.
புதிய உச்சத்தை தொட்டது சென்செக்ஸ்

மும்பை: மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ், திங்கள்கிழமை புதிய உச்சத்தை தொட்டு, 530 புள்ளிகள் அதிகரித்தது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

40,359 புள்ளிகளுடன் திங்கள்கிழமை தொடங்கிய மும்பை பங்கு வா்த்தகம், விறுவிறுப்பாக நடைபெற்று 40,932 புள்ளிகள் வரை அதிகரித்தது. இது, இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச உயா்வாகும். இறுதியில், சென்செக்ஸ் 40,889 புள்ளிகளுடன் நிலைத்தது. இது முந்தைய வா்த்தகத்தைவிட 530 புள்ளிகள் அதிகமாகும்.

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வா்த்தகப் பதற்றத்தைத் தணிப்பதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்ற புதிய நம்பிக்கை பிறந்துள்ளதாகக் கூறப்படுவது முதலீட்டாளா்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, சென்செக்ஸ் புள்ளிகள் புதிய உச்சத்தைத் தொட்டதாக சந்தை வட்டாரங்கள் கூறின.

தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டியும் திங்கள்கிழமை 159 புள்ளிகள் அதிகரித்தது 2,074 புள்ளிகளில் நிலைத்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com