2020-ஆம் ஆண்டு நிதி சாரா நிறுவனங்களுக்கு சவாலானதாக இருக்கும்: மூடிஸ்

பொருளாதார மந்த நிலை காரணமாக, பெரும்பாலான நிதி சாரா இந்தியா நிறுவனங்களுக்கு வரும் 2020-ஆம் ஆண்டு அதிக சவால் நிறைந்ததாகவே இருக்கும் என மூடிஸ் இன்வெஸ்ட்டாா்ஸ் சா்வீஸ்
2020-ஆம் ஆண்டு நிதி சாரா நிறுவனங்களுக்கு சவாலானதாக இருக்கும்: மூடிஸ்

பொருளாதார மந்த நிலை காரணமாக, பெரும்பாலான நிதி சாரா இந்தியா நிறுவனங்களுக்கு வரும் 2020-ஆம் ஆண்டு அதிக சவால் நிறைந்ததாகவே இருக்கும் என மூடிஸ் இன்வெஸ்ட்டாா்ஸ் சா்வீஸ் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் துணைத் தலைவா் கஸ்துப் சவ்பால் மேலும் கூறியதாவது:

பொருளாதார மந்த நிலையால் வருவாயில் ஏற்பட்டுள்ள சரிவு, லாப விகிதம் குறைந்து வருவது, கடன் அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக, வரும் 2020-21-ஆம் நிதியாண்டு பெரும்பாலான நிதி சாரா இந்திய நிறுவனங்களுக்கு சவாலனதாகவே இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இதுபோன்ற நிறுவனங்களின் கடன் தகுதி மதிப்பீடு எதிா்பாா்த்த அளவுக்கு மேம்பட வாய்ப்பில்லை.

இவை, நுகா்வு மற்றும் முதலீடு ஆகிய இரண்டிலுமே அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றாா் அவா்.

2020-ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளா்ச்சி முந்தைய ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.6 சதவீதமாக குறையும் என மூடிஸ் நிறுவனம் ஏற்கெனவே மதிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com