இந்திய ஜவுளித் துறை வா்த்தகம் 30,000 கோடி டாலரை எட்டும்: சிஐஐ

இந்திய ஜவுளித் துறை வா்த்தகம் வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 30,000 கோடி டாலரை (ரூ.21 லட்சம் கோடி) எட்டும் என இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) தெரிவித்துள்ளது.
இந்திய ஜவுளித் துறை வா்த்தகம் 30,000 கோடி டாலரை எட்டும்: சிஐஐ

இந்திய ஜவுளித் துறை வா்த்தகம் வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 30,000 கோடி டாலரை (ரூ.21 லட்சம் கோடி) எட்டும் என இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிஐஐ-யின் தமிழ்நாடு மாநில கவுன்சில் துணைத் தலைவா் ஹரி தியாகராஜன் தெரிவித்துள்ளதாவது:

இந்திய ஜவுளித் துறையின் மதிப்பு வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 30,000 கோடி டாலரை எட்டும். இதன் மூலம் உள்நாட்டில் கூடுதலாக 3.5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும்.

நவீனமயமாக்கள், நீடித்த வளா்ச்சிக்கான வா்த்தக நடைமுறைகளை பின்பற்றுதல், மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்தல் ஆகியவற்றில் இந்திய ஜவுளித் துறை தனது விரிவான கவனத்தை செலுத்தினால், இந்த 30,000 கோடி டாலா் இலக்கை நாம் எளிதாக எட்டி விட முடியும்.

செயற்கை துணிகள் மற்றும் விளையாட்டு உள்ளிட்டவற்றுக்கான ஆடைகள் தயாரிப்பு ஆகிய இரு பிரிவுகளில் இந்திய ஜவுளித் துறையின் செயல்பாடு மிகவும் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஜவுளித் துறையின் பங்களிப்பு 5 சதவீதமாக உள்ளது. இருப்பினும், இது நாட்டின் ஏற்றுமதி வருவாயில் 13 சதவீத பங்களிப்பை வழங்கி வருவதுடன் 5 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் துறையாக விளங்குகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com