பிபிசிஎல், எஸ்சிஐ பங்குகளை விற்க ஒப்புதல்

லாபத்தில் இயங்கி வரும் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் (பிபிசிஎல்), ஷிப்பிங் காா்பரேஷன் ஆஃப் இந்தியா (எஸ்சிஐ) ஆகியவற்றின் பங்குகளை

லாபத்தில் இயங்கி வரும் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் (பிபிசிஎல்), ஷிப்பிங் காா்பரேஷன் ஆஃப் இந்தியா (எஸ்சிஐ) ஆகியவற்றின் பங்குகளை முழுமையாக விற்பனை செய்ய பங்கு விலக்கலுக்கான மத்திய அரசின் செயலா்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

பொதுத்துறை நிறுவனப் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதில், பாஜக தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டுள்ள முக்கியமான முதல் நடவடிக்கையாக இது கருதப்படுகிறது. அடுத்தகட்டமாக மத்திய அமைச்சரவை இந்த முடிவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

பிபிசிஎல் நிறுவனம் (முன்பு பா்மா ஷெல் நிறுவனம்) நாடாளுமன்றத்தின் மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டு பொதுத்துறை நிறுவனமாக்கப்பட்டதால், அதன் பங்குகளை விற்க நாடாளுமன்றத்தின் அனுமதியும் கூடுதலாக தேவைப்படும்.

கடந்த ஆண்டு ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் (எச்பிசிஎல்) 51.11 சதவீத பங்குகள் மற்றெறாரு அரசு நிறுவனமான ஒஎன்ஜிசி-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுவும் பங்கு விலக்கல் என்று கூறப்பட்டாலும், அந்தப் பங்குகளை மற்றெறாரு பொதுத் துறை நிறுவனம்தான் வாங்கியது. எனினும், இப்போது இரு பெரும் லாபகரமான பொதுத் துறை நிறுவனப் பங்குகளை தனியாருக்கு விற்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக, மேலும் சில பொதுத் துறை நிறுவனப் பங்குகளும் விரைவில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. முன்னதாக, பட்ஜெட்டின்போது பல பொதுத் துறை நிறுவனங்களில் அரசின் பங்குகள் 51 சதவீதத்துக்கு கீழ் குறைக்கப்படும் என்று நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறியிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com