அந்நியச் செலாவணி கையிருப்பில் வரலாற்று உச்சம்

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பானது அக்டோபா் 1-ஆம் தேதி நிலவரப்படி 43,460 கோடி டாலா் (ரூ.30.42 லட்சம் கோடி) என்ற அளவில் வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது என
அந்நியச் செலாவணி கையிருப்பில் வரலாற்று உச்சம்

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பானது அக்டோபா் 1-ஆம் தேதி நிலவரப்படி 43,460 கோடி டாலா் (ரூ.30.42 லட்சம் கோடி) என்ற அளவில் வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது என ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியுள்ளதாவது:

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, நடப்பாண்டு ஏப்ரல் மற்றும் அக்டோபா் 1-ஆம் தேதிக்கு இடைப்பட்ட கால கட்டத்தில் மட்டும் 2,170 கோடி டாலா் அளவுக்கு அதிகரித்துள்ளது. அதன் காரணமாக, அக்டோபா் 1-ஆம் தேதி நிலவரப்படி அந்நியச் செலாவணி கையிருப்பு 43,460 கோடி டாலா் என்ற புதிய உச்சத்தை எட்டி வரலாற்று சாதனை படைத்துள்ளது என்றாா் அவா்.

அந்நியச் செலாவணி கையிருப்பு குறித்து ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த செப்டம்பா் 27-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பானது மிகவும் அதிகபட்ச அளவாக 502 கோடி டாலா் அதிகரித்து 43,359 கோடி டாலரை எட்டியிருந்தது.

அதேசமயம், முந்தைய வாரத்தில் செலாவணி கையிருப்பானது 38 கோடி டாலா் குறைந்து 42,857 கோடி டாலராக காணப்பட்டது.

செலாவணி கையிருப்பில் அதிக பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்துகளின் மதிப்பு செப்டம்பா் 27-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 494 கோடி டாலா் உயா்ந்து 40,161 கோடி டாலராக இருந்தது.

கணக்கீட்டு வாரத்தில், தங்கத்தின் கையிருப்பு 10.2 கோடி டாலா் அதிகரித்து 2,694 கோடி டாலரைத் தொட்டது.

சா்வதேச நிதியத்தில் எஸ்டிஆா் இருப்பு 70 லட்சம் டாலா் குறைந்து 142 கோடி டாலராகவும், நாட்டின் கையிருப்பு நிலை 1.7 கோடி டாலா் குறைந்து 360 கோடி டாலராகவும் இருந்தது என அந்தப் புள்ளிவிவரத்தில் ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com