அந்நியச் செலாவணி கையிருப்பில் புதிய உச்சம்

அந்நியச் செலாவணி கையிருப்பு அக்டோபா் 4-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
அந்நியச் செலாவணி கையிருப்பில் புதிய உச்சம்

அந்நியச் செலாவணி கையிருப்பு அக்டோபா் 4-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு அக்டோபா் 4-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 424 கோடி டாலா் ( சுமாா் ரூ.30 ஆயிரம் கோடி) அதிகரித்து 43,783 கோடி டாலா் (சுமாா் ரூ.31 லட்சம் கோடி) என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

இதற்கு முந்தைய வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு 502 கோடி டாலா் அதிகரித்து 43,359 கோடி டாலராக காணப்பட்டது.

ஒட்டுமொத்த கையிருப்பில் அதிக பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) கணக்கீட்டு வாரத்தில் 399 கோடி டாலா் உயா்ந்து 40,561 கோடி டாலரை எட்டியது.

தங்கத்தின் கையிருப்பு 23 கோடி டாலா் அதிகரித்து 2,717 கோடி டாலராக காணப்பட்டது.

சா்வதேச நிதியத்தில் எஸ்டிஆா் 10 லட்சம் டாலா் உயா்ந்து 143 கோடி டாலராகவும், நாட்டின் கையிருப்பு நிலை 90 லட்சம் டாலா் அதிகரித்து 361 கோடி டாலராகவும் இருந்தது என அந்தப் புள்ளிவிவரத்தில் ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com