பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் (ஐஓசி) நிறுவனத்தின் நிகர லாபம் இரண்டாம் காலாண்டில் 83 சதவீதம் சரிவைச் சந்தித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவா் சஞ்சீவ் சிங், வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நடப்பு நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான இரண்டாவது காலாண்டில் நிறுவனம் ரூ.564 கோடி நிகர லாபம் ஈட்டியது. கடந்த நிதியாண்டின் இதே கால அளவில் ஈட்டிய லாபமான ரூ.3,247 கோடியுடன் ஒப்பிடும்போது இது 83 சதவீதம் சரிவாகும்.
சுத்திகரிப்பு லாப வரம்பு குறைந்து போனது உள்ளிட்ட காரணங்களால் 2-ஆவது காலாண்டில் லாபம் வெகுவாக சரிந்தது. முந்தைய நிதியாண்டில் இரண்டாவது காலாண்டில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்க்கு கிடைத்த லாப வரம்பு 6.79 டாலராக இருந்த நிலையில் நடப்பாண்டில் இது 1.28 டாலராக குறைந்து போனது.
இரண்டாவது காலாண்டில் அந்நியச் செலாவணி இழப்பு ரூ.1,135 கோடியாக காணப்பட்டது.
மேலும், விலை சரிவின் காரணமாக நிறுவனத்தின் விற்று முதல் ரூ.1.51 லட்சம் கோடியிலிருந்து ரூ.1.32 லட்சம் கோடியாக குறைந்தது என்றாா் அவா்.