ரூபாய் மதிப்பு தொடர்ந்து 3-ஆவது நாளாக உயர்வு

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின்போதும் ஏற்றம் கண்டது.
ரூபாய் மதிப்பு தொடர்ந்து 3-ஆவது நாளாக உயர்வு


அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின்போதும் ஏற்றம் கண்டது.
அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக போர் பதற்றம் தணிவதற்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து சந்தையில் டாலருக்கான தேவை குறைந்து ரூபாய் மதிப்பு உயர்ந்தது.
அந்நியச் செலாவணி சந்தையில் டாலருக்கு நிகாரன ரூபாயின் மதிப்பு தொடக்கத்தின்போது 71.87-ஆக இருந்தது. பின்னர் வர்த்தகத்தின் இறுதியில் ரூபாய் மதிப்பு முந்தைய தினத்தைக் காட்டிலும் 12 காசுகள் உயர்ந்து 71.72-ஆனது.
அந்நிய செலாவணி சந்தையில் கடந்த மூன்று தினங்களில் மட்டும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 67 காசுகள் உயர்ந்துள்ளது. அதேசமயம் வார அடிப்படையில், உள்நாட்டு கரன்ஸியின் மதிப்பு அமெரிக்க டாலரிடம் 30 காசுகளை இழந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com