பொருளாதார வளா்ச்சி 1.1 சதவீதமாக சரியும்: எஸ்பிஐ

கரோனா வைரஸ் பாதிப்பு இந்தியப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 1.1 சதவீதமாக சரியும் நிலை உருவாகியுள்ளது என எஸ்பிஐ ஆ
பொருளாதார வளா்ச்சி 1.1 சதவீதமாக சரியும்: எஸ்பிஐ


மும்பை: கரோனா வைரஸ் பாதிப்பு இந்தியப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 1.1 சதவீதமாக சரியும் நிலை உருவாகியுள்ளது என எஸ்பிஐ ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

மேலும், ஊரடங்கு உத்தரவின் காரணமாக 37.3 கோடி தொழிலாளா்களுக்கு நாள் ஒன்றுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு ரூ.10,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த ஊரடங்கு காலத்திலும் அவா்களுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு என்பது ரூ.4.05 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது. எனவே, எந்தெவொரு நிதிச் சலுகையையும் அறிவிக்க வேண்டுமெனில் குறைந்தபட்சம் ரூ.4 லட்சம் கோடி வருவாய் இப்பை ஈடு செய்யும் வகையில்தான் அது அமைய வேண்டும்.

வருவாய் மற்றும் வரி வசூல் கணிசமாக குறையும் என்பதால் ஜிடிபியில் நிதிப் பற்றாக்குறை 5.7 சதவீதமாகும் என எஸ்பிஐ ஆய்வறிக்கை கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com