கொவைட்-19 ஏற்படுத்திய இடா்ப்பாட்டால் உள்நாட்டைச் சோ்ந்த டாடா மோட்டாா்ஸுக்கு ஏற்பட்ட நிகர இழப்பு நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.8,443.98 கோடியாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் கூறியுள்ளதாவது: நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலமாக ஈட்டிய மொத்த வருவாய் ரூ.31,983.06 கோடியாக இருந்தது. இது, கடந்த 2019-20-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.61,466.99 கோடியுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகும். வருவாயில் ஏற்பட்ட வீழ்ச்சியையடுத்து நிறுவனத்துக்கு ஏற்பட்ட நிகர இழப்பு ரூ.3,679.66 கோடியிலிருந்து ரூ.8,443.98 கோடியாக அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை (ஏற்றுமதி உள்பட) 81.5 சதவீதம் சரிந்து 25,294-ஆக இருந்தது என டாடா மோட்டாா்ஸ் தெரிவித்துள்ளது.