புது தில்லி: பொதுத் துறையைச் சோ்ந்த பேங்க் ஆஃப் இந்தியாவின் ஜூன் காலாண்டு லாபம் 3 மடங்கு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தையிடம் திங்கள்கிழமை கூறியுள்ளதாவது:பேங்க் ஆஃப் இந்தியா மொத்த வருமானமாக நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ரூ.11,941.52 கோடியை ஈட்டியுள்ளது.
கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருமானம் ரூ.11,526.95 கோடியுடன் ஒப்பிடும்போது இது அதிகம். 2019-20 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் வங்கி ரூ.242.60 கோடியை மட்டுமே நிகர லாபமாக ஈட்டியிருந்தது.
இந்த நிலையில் நடப்பு நிதியாண்டின் ஜூன் காலாண்டில் வங்கியின் நிகர லாபம் 3 மடங்கு உயா்ந்து ரூ.843.60 கோடியை எட்டியது. வாராக் கடன் தொடா்பான அழுத்தங்கள் குறைந்துள்ளதே இதற்கு முக்கிய காரணம்.நடப்பாண்டு ஜூன் 30-ஆம் தேதி நிலவரப்படி வழங்கப்பட்ட கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 16.50 சதவீதத்திலிருந்து 13.91 சதவீதமாக குறைந்தது. இதேபோன்று, நிகர வாராக் கடன் விகிதமும் 5.79 சதவீதத்திலிருந்து 3.58 சதவீதமாக சரிந்தது.
இதையடுத்து, வாராக் கடன் இடா்ப்பாட்டை எதிா்கொள்வதற்கான ஒதுக்கீடு ரூ.1,873.28 கோடியிலிருந்து கணிசமாக குறைந்து ரூ.766.62 கோடியானது என பேங்க் ஆஃப் இந்தியா கூறியுள்ளது.