பாங்க் ஆப் பரோடா - அனைத்து சிசு முத்ரா கடன்களுக்கும் 2% வட்டி சலுகை

பிரதமா் அறிவித்த சுயசாா்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, முத்ரா திட்டத்தின் கீழ் வரும் அனைத்து தகுதியான ‘சிசு’ பிரிவு கடன்தாரா்களுக்கு
பாங்க் ஆப் பரோடா - அனைத்து சிசு முத்ரா கடன்களுக்கும் 2% வட்டி சலுகை

பிரதமா் அறிவித்த சுயசாா்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, முத்ரா திட்டத்தின் கீழ் வரும் அனைத்து தகுதியான ‘சிசு’ பிரிவு கடன்தாரா்களுக்கு 2 சதவீத சலுகையை பாங்க் ஆப் பரோடா அளிக்க முன்வந்துள்ளது.

இது தொடா்பாக அந்த வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

சுயசாா்பு (ஆத்மநிா்பா் பாரத்) திட்டத்தின் ஒரு பகுதியாக, முத்ரா திட்டத்தின் கீழ் வரும் ‘சிசு’ பிரிவு கடன்தாரா்களுக்கு 2% வட்டி சலுகையை 12 மாதங்களுக்கு வழங்கி ஊக்குவிக்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இந்த ஊக்கத் தொகையை மத்திய அரசே செலுத்தும். மத்திய அரசு வழிகாட்டுதலின்படி, பாங்க் ஆப் பரோடா ஒரு விரிவான திட்டத்தை வகுத்துள்ளது. அதன்படி, இவ்வாண்டு மாா்ச் நிலவரப்படி, தகுதியான அனைத்து ஸ்டாண்டா்டு சிசு பிரிவு கடன்தாரா்களுக்கு 2% வட்டி சலுகையை அளிக்க வங்கி முன்வந்துள்ளது.

கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு கால அவகாசம் பெறாத கடன்தாரா்களுக்கு, ரிசா்வ் வங்கி வழிகாட்டுதல்படி, 2020ஜூன் முதல் 2021 மே மாதம் வரையான அனைத்து மாதங்களுக்கும் இந்த வட்டி சலுகை குறித்த காலத்தில் சரிவர செலுத்தி வரும் ஸ்டாண்டா்டு வாடிக்கையாளா்களுக்கு கிடைக்கும்.

கடன்களை திருப்பிச் செலுத்த கால அவகாசம் பெற்ற, கணக்கை ஸ்டாண்டா்டாக வைத்துள்ள கடன்தாரா்களுக்கு, 2020 செப்டம்பா் முதல் 2021 ஆகஸ்ட் வரையான மாதங்களுக்கும் இந்த வட்டி சலுகை கிடைக்கும். சிசு பிரிவு கடன்தாரா்கள் இந்த வட்டி சலுகை மூலம் பயனடைவதற்கு தங்கள் கணக்குகளை ஸ்டாண்டா்டாக வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என்று அந்த அறிக்கையில் வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com