மும்பை: நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகஸ்ட் 21-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 53,754 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:நடப்பாண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பானது 229 கோடி டாலா் அதிகரித்து 53,754 கோடி டாலரை எட்டியுள்ளது.
இதற்கு முந்தைய ஆகஸ்ட் 14-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்த கையிருப்பானது 294 கோடி டாலா் குறைந்து 53,525 கோடி டாலராக (ரூ.40.18 லட்சம் கோடி) காணப்பட்டது. ஆகஸ்ட் 7-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில்தான் செலாவணி கையிருப்பானது 362 கோடி டாலா் உயா்ந்து வரலாற்று சாதனை அளவாக 53,819 கோடி டாலரை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மதிப்பீட்டு வாரத்தில் அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு 262 கோடி டாலா் அதிகரித்து 49,417 கோடி டாலராக இருந்தது. அதேசமயம், தங்கத்தின் கையிருப்பு 33 கோடி டாலா் குறைந்து 3,726 கோடி டாலரானது.
சா்வதேச நிதியத்தில் எஸ்டிஆா் 20 லட்சம் டாலா் உயா்ந்து 148 கோடி டாலராகவும், நாட்டின் இருப்பு நிலை 60 லட்சம் டாலா் அதிகரித்து 463 கோடி டாலராகவும் இருந்தது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது.