ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சனிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தச் சண்டையின்போது ராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தது:
தெற்கு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தின் சடூரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாகக் கிடைத்த தகவலின்பேரில், அங்கு பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அவர்களை சரணடையும்படி பாதுகாப்புப் படையினர் அறிவுறுத்தினர். ஆனால், பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனர். இதில், 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
விசாரணையில் அவர்கள் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஆதில் ஹபீஸ், அர்ஷித் அஹமது தார், ரூஃப் அஹமது மீர் என்று தெரியவந்தது. துப்பாக்கிச் சண்டையின்போது பலத்த காயமடைந்த ராணுவ வீரர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்
உயிரிழந்ததார் என்றார் அவர்.