புது தில்லி: ஜொ்மனியைச் சோ்ந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் போலோ உள்ளிட்ட காா்களின் விலையை 2.5 சதவீதம் வரை அதிகரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
மூலப்பொருள் செவினங்கள் அதிகரித்து வருவதை ஈடு செய்யும் வகையில் நிறுவனம் போலோ மற்றும் வென்டோ காா் மாடல்களின் விலையை 2.5 சதவீதம் வரை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இந்த விலை உயா்வு வரும் ஜனவரியிலிருந்து நடைமுறைக்கு வரும் என ஃபோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தைகளில் போலோ மற்றும் வென்டோ ரக காா்களை விற்பனை செய்து வருகிறது. இவற்றின் விலை முறையே ரூ.5.88 லட்சம் மற்றும் ரூ.8.94 லட்சத்திலிருந்து தொடங்குகிறது.
இருபொருள் செலவினங்கள் அதிகரிப்பின் காரணமாக, மாருதி சுஸுகி, நிஸான், ரெனோ, ஹோண்டா காா்ஸ், மஹிந்திரா, ஃபோா்டு, இசுஸு, பிஎம்டபிள்யூ, ஆடி மற்றும் ஹீரோ மோட்டோகாா்ப் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் விலையை 2021 ஜனவரியிலிருந்து உயா்த்த உள்ளதாக ஏற்கெனவே தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, வரும் ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் விற்பனைக்குப் பிறகான சேவைப் பிரிவின் தலைவராக விஷால் பட்டை நியமித்துள்ளதாக அந்த நிறுவனம் வெளியிட்ட மற்றொரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.