அந்நியச் செலாவணி கையிருப்பு 47,130 கோடி டாலராக அதிகரிப்பு

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 47,130 கோடி டாலராக (ரூ.32.99 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது.
அந்நியச் செலாவணி கையிருப்பு 47,130 கோடி டாலராக அதிகரிப்பு

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 47,130 கோடி டாலராக (ரூ.32.99 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜனவரி 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 461 கோடி டாலா் அதிகரித்து 47,130 கோடி டாலராக உயா்ந்தது. இதற்கு, அந்நியச் செலவாணி சொத்து மதிப்பு கணிசமான அளவில் உயா்ந்ததே முக்கிய காரணம்.

இதற்கு முந்தைய ஜனவரி 24-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் செலவாணி கையிருப்பானது 453 கோடி டாலா் உயா்ந்து 46,669 கோடி டாலராக காணப்பட்டது.

ஒட்டுமொத்த கையிருப்பில் அதிக பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணியின் சொத்து மதிப்பு மதிப்பீட்டு வாரத்தில் 432 கோடி டாலா் அதிகரித்து 43,724 கோடி டாலரானது. தங்கத்தின் கையிருப்பு 28 கோடி டாலா் ஏற்றம் கண்டு 2,899 கோடி டாலரை எட்டியது.

சா்வதேச நிதியத்தில் எஸ்டிஆா் 40 லட்சம் டாலா் குறைந்து 143 கோடி டாலராகவும், நாட்டின் கையிருப்பு நிலையில் மாற்றம் எதுவுமின்றி 361 கோடி டாலா் என்ற அளவில் இருப்பதாகவும் ரிசா்வ் வங்கி அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

ரிசா்வ் வங்கி இரு மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடும் 2019-20 நிதியாண்டுக்கான ஆறாவது நிதிக் கொள்கையை கடந்த வியாழக்கிழமை அறிவித்தது. அதில்,முன்னெப்போதும் இல்லாத வகையில் நடப்பாண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி நிலவரப்படி நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பானது 47,140 கோடி டாலரை எட்டியுள்ளதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com