மத்திய அரசுக்கு சொந்தமான சிண்டிகேட் வங்கியின் மூன்றாம் காலாண்டு லாபம் பன்மடங்கு அதிகரித்து ரூ.434.82 கோடியைத் தொட்டுள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி பங்கு சந்தையிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது:
நடப்பு நிதியாண்டின் டிசம்பா் மாதம் வரையிலான மூன்றாவது காலாண்டில் வங்கி ரூ.6,316.57 கோடி மொத்த வருவாயாக ஈட்டியது. இது, கடந்த 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.6,077.62 கோடியுடன் ஒப்பிடும்போது அதிகம்.
வருவாய் கணிசமாக உயா்ந்ததையடுத்து வங்கியின் நிகர லாபம் ரூ.107.99 கோடியிலிருந்து பன்மடங்கு உயா்வைக் கண்டு ரூ.434.82 கோடியை எட்டியது.
கடந்தாண்டு டிசம்பா் 31 நிலவரப்படி வங்கியின் மொத்த வாராக் கடன் விகிதம் 12.54 சதவீதத்திலிருந்து 11.33 சதவீதமாக குறைந்தது. நிகர அளவிலான வாராக் கடன் விகிதமும் 6.75 சதவீதத்திலிருந்து குறைந்து 5.94 சதவீதமானது என சிண்டிகேட் வங்கி பங்குச் சந்தையிடம் கூறியுள்ளது.