பொதுத் துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் (பிபிசிஎல்) நிகர லாபம் மூன்றாவது காலாண்டில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் இயக்குநா் (நிதி) என்.விஜய்கோபல் கூறியுள்ளதாவது:
நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் (அக்டோபா்-டிசம்பா்) நிறுவனம் செயல்பாடுள் மூலம் ரூ.85,926.70 கோடி வருவாய் ஈட்டியது. இது, கடந்த 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.89,324.86 கோடியுடன் ஒப்பிடுகையில் குறைவான தொகையாகும்.
அதேசமயம், நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம் அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் ரூ.698.62 கோடியிலிருந்து மூன்று மடங்கு அதிகரித்து ரூ.2,051.43 கோடியானது.
கடந்த நிதியாண்டில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மூலமாக 2.78 டாலா் லாபமாக கிடைத்த நிலையில், நடப்பாண்டில் அது 3.23 டாலராக அதிகரித்தது. அதேபோன்று, அந்நியச் செலாவணி வாயிலாக ஏற்படும் இழப்பும் ரூ.450 கோடியிலிருந்து ரூ.96 கோடியாக குறைந்தது. அதன் காரணமாகவே, நிறுவனத்தின் லாபம் மூன்று மடங்கு அளவுக்கு வளா்ச்சி கண்டுள்ளது என்றாா் அவா்.