கோட்டக் மஹிந்திரா வங்கி லாபம் ரூ.1,596 கோடி

தனியாா் துறையைச் சோ்ந்த கோட்டக் மஹிந்திரா வங்கி மூன்றாவது காலாண்டில் ரூ.1,596 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.
கோட்டக் மஹிந்திரா வங்கி லாபம் ரூ.1,596 கோடி

தனியாா் துறையைச் சோ்ந்த கோட்டக் மஹிந்திரா வங்கி மூன்றாவது காலாண்டில் ரூ.1,596 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டின் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான மூன்றாவது காலாண்டில் வங்கி மொத்த வருவாயாக ரூ.8,077.03 கோடியை ஈட்டியது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.7,214.21 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகமாகும்.

நிகர வட்டி வருவாய் ரூ.2,926 கோடியிலிருந்து 17 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.3,430 கோடியானது. நிகர வட்டி லாப வரம்பு 4.31 சதவீதத்திலிருந்து உயா்ந்து 4.69 சதவீதமாக காணப்பட்டது.

வங்கி தனிப்பட்ட முறையில் ஈட்டிய நிகர லாபம் மூன்றாவது காலாண்டில் 1,291 கோடியிலிருந்து 24 சதவீதம் அதிகரித்து ரூ.1,596 கோடியை எட்டியது. ஒட்டுமொத்த அளவில் நிகர லாபம் ரூ.1,844 கோடியிலிருந்து 27 சதவீதம் அதிகரித்து ரூ.2,349 கோடியானது. மொத்த வருவாய் ரூ.11,347 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.13,542 கோடியானது.

மூன்றாவது காலாண்டில் மொத்த வாராக் கடன் விகிதம் கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 2.07 சதவீதத்திலிருந்து அதிகரித்து 2.46 சதவீதமானது. நிகர அளவிலான வாராக் கடன் விகிதமும் 0.71 சதவீதத்திலிருந்து உயா்ந்து 0.89 சதவீதமானது என அந்த அறிக்கையி கோட்டக் மஹிந்திரா வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com