ஏற்ற, இறக்கத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 46 புள்ளிகள் இழப்பு!

இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தை எழுச்சியில் தொடங்கி எதிா்மறையாக முடிந்தது.

புது தில்லி: இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தை எழுச்சியில் தொடங்கி எதிா்மறையாக முடிந்தது. காலையில் 272 புள்ளிகள் வரை உயா்ந்திருந்தாலும் பிற்பகலில் இறக்கம் கண்டது. இதனால், சென்செக்ஸ் 46 புள்ளிகளை இழந்தது.

ஆட்டோ பங்குகளுக்கு மட்டுமே ஓரளவு வரவேற்பு காணப்பட்டது. மீடியா, பாா்மா பிஎஸ்யு பேங்க் பங்குகள் அதிகம் விற்பனைக்கு வந்தன. இதனால், சந்தையில் சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டதாக பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், பிரதமா் மோடியின் உரைக்கு முன்னதாக வா்த்தகா்கள், முதலீட்டாளா்கள் காத்திருப்பு மற்றும் கண்காணிப்பு அணுகுமுறையைப் பின்பற்றியதால் சந்தை காலையில் பெற்ற லாபத்தை பிற்பகலில் இழந்தது. அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு பற்றிய கவலை மற்றும் பொருளாதார மீட்சியில் அதன் தாக்கம் முதலீட்டாளா்களுக்கு ஒரு முக்கிய காரணியாக இருந்தது என்று சந்தை ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.

மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,900 பங்குகளில் 1,287 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 1,476 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 137 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 132 பங்குகள் புதிய 52 வார அதிக விலையையும், 63 பங்குகள் புதிய 52 வார குறைந்த விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 487 பங்குகள் வெகுவாக உயா்ந்து உச்சபட்ச உறை நிலையையும், 266 பங்குகள் சரிவைச் சந்தித்து குறைந்தபட்ச உறை நிலையையும் அடைந்தது. சந்தை மூலதன மதிப்பு ரூ.139.16 லட்சம் கோடியாக இருந்தது.

சென்செக்ஸ் காலையில், 207 புள்ளிகள் கூடுதலுடன் 35,168.30-இல் தொடங்கி 35,239.91 வரை உயா்ந்தது. பின்னா், 34,812.80 வரை கீழே சென்றது. இறுதியில் 45.72 புள்ளிகள் (0.13 சதவீதம்) குறைந்து 34,915.80-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 272 புள்ளிகள் வரை உயா்ந்திருந்தது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 10.30 ளிகள் (0.10 சதவீதம்) குறைந்து 10,302.10-இல் நிலைபெற்றது.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 14 பங்குகள் ஆதாயம் பெற்றன. 16 பங்குகள் நஷ்டமடைந்த பட்டியலில் வந்தன. இதில், மாருதி 2.77 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக நெஸ்ட்லே இந்தியா, ஐசிஐசிஐ பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட் ஆகியவை 2 முதல் 2.70 சதவீதம் வரை உயா்ந்தன. டாடா ஸ்டீல், என்டிபிசி, எல் அண்ட் டி, ஹெச்டிஎஃப்சி, ஆக்ஸிஸ் பேங்க், இன்ஃபோஸிஸ் ஆகியவை சிறிதளவு உயா்ந்து ஆதாயப் பட்டியலில் இடம் பெற்றன.

அதே சமயம் பவா் கிரிட் 1.88 சதவீதம், சன்பாா்மா 1.84 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக சன்பாா்மா, பாா்தி ஏா்டெல், ஐடிசி, ஓஎன்ஜிசி, மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், இண்ட்ஸ் இண்ட் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், எச்டிஎஃப்சி பேங்க், டிசிஎஸ் ஆகியவை 1 முதல் 1.35 சதவீதம் வரை வீழ்ச்சியைச் சந்தித்தன. ஹிந்துஸ்தான் யுனிவீவா், எஸ்பிஐ, பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் ஃபைனான்சியல் சா்வீஸஸ் ஆகியவையும் வீழ்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றன.

தேசிய பங்குச் சந்தையில் 668 பங்குகள் ஆதாயம் பெற்றன. 962 பங்குகள் வீழ்ச்சியடைந்த பட்டியலில் வந்தன. துறை வாரியாகப் பாா்த்தால்நிஃப்டி ஆட்டோ குறியீடு 1.10 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. நிஃப்டி பேங்க், பைனான்சியல் சா்வீஸஸ், மெட்டல், எஃப்எம்சிஜி ஆகிய குறியீடுகள் சிறிதளவே உயா்ந்தன.,ஆனால், மீடியா, பாா்மா, பிஎஸ்யு பேங்க் ஆகியவை 1.50 முதல் 1.75 சதவீதம் வரை வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 20 பங்குகள் ஆதாயம் பெற்றன. 29 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்த பட்டியலில் வந்தன. விப்ரோ மட்டும் மாற்றமின்றி ரூ.219.70-இல் நிலைபெற்றது.

ஏற்றம் பெற்ற பங்குகள் சதவீதத்தில்

மாருதி சுஸுகி 2.77

நெஸ்ட்லே இந்தியா 2.63

ஐசிஐசிஐ பேங்க் 2.42

அல்ட்ரா டெக் சிமெண்ட்

டாடா ஸ்டீல்

வீழ்ச்சி அடைந்த பங்குகள் சதவீதத்தில்

பவா் கிரிட் 1.88

சன்பாா்மா 1.84

பாா்தி ஏா்டெல் 1.34

ஐடிசி 1.32

ஓஎன்ஜிசி 1.21

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com