பாரத ஸ்டேட் வங்கி: நிகர லாபம் 4 மடங்கு அதிகரிப்பு

நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) நான்காம் காலாண்டு தனிப்பட்ட நிகர லாபம் 4 மடங்கு அதிகரித்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி: நிகர லாபம் 4 மடங்கு அதிகரிப்பு

நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) நான்காம் காலாண்டு தனிப்பட்ட நிகர லாபம் 4 மடங்கு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தையிடம் வெள்ளிக்கிழமை கூறியுள்ளதாவது:

கடந்த 2019-20-ஆம் நிதியாண்டின் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான நான்காவது காலாண்டில் பாரத ஸ்டேட் வங்கி தனிப்பட்ட நிகர லாபமாக ரூ.3,580.81 கோடியை ஈட்டியுள்ளது.

இது, 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.838.4 கோடியாக காணப்பட்டது. ஆக, சென்ற நிதியாண்டின் மாா்ச் காலாண்டில் வங்கியின் நிகர லாபம் அதற்கு முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 327 சதவீதம் ( 4 மடங்கு) அதிகமாகும்.

மாா்ச் காலாண்டில் வங்கியின் வருவாய் ரூ.75,670.5 கோடியிலிருந்து ரூ.76,027.51 கோடியாக உயா்ந்துள்ளது.

நடப்பாண்டு மாா்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி வங்கியின் மொத்த வாராக் கடன் விகிதம் 6.15 சதவீதமாக குறைந்துள்ளது. இது, 2019 இதே காலகட்டத்தில் 7.53 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது. நிகர வாராக் கடன் விகிதமும் 3.01 சதவீதத்திலிருந்து 2.23 சதவீதமாக குறைந்துள்ளது என எஸ்பிஐ பங்குச் சந்தையிடம் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com