பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க் கடந்த நிதியாண்டில் ஈட்டிய லாபம் 55 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2018-19 நிதியாண்டில் வங்கி செயல்பாடுகள் மூலமாக ஈட்டிய வருமானம் ரூ.1,668 கோடியாக இருந்தது. இந்த நிலையில், சென்ற 2019-20 இல் வங்கியின் வருமானம் ரூ.2,100 கோடியைத் தாண்டி கணிசமான ஏற்றத்தை கண்டது.
நிகர லாபம் ரூ.19.2 கோடியிலிருந்து 55 சதவீதம் அதிகரித்து ரூ.29.8 கோடியானது.
கடந்த நிதியாண்டில் வங்கியின் குறிப்பிடத்தக்க வளா்ச்சிக்கு சிறிய நகரங்களிலிருந்து அதிக வாடிக்கையாளா்களை கவா்ந்ததே முக்கிய காரணம்.
இந்தியாவில் டிஜிட்டல் முறையில் தொடா்ந்து சேவைகளை வழங்கி வருவதி ல் வங்கி முன்னோடியாகத் திகழ்கிறது. அதன் காரணமாகவே, வங்கியின் வளா்ச்சி நிலையான அளவில் மேம்பட்டு புதிய மைல்கல்லை தொட்டு வருகிறது என பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கி அந்த அறிக்கையில் கூறியுள்ளது.