பொதுத் துறையைச் சோ்ந்த கனரா வங்கி நடப்பு நிதியாண்டில் டெபாசிட் வளா்ச்சி விகிதம் 10 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கியின் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான எல்.வி. பிரபாகா் கூறியதாவது:
கடந்த மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் வங்கிக்கு ஏற்பட்ட தனிப்பட்ட நிகர இழப்பு ரூ.3,259 கோடியாக இருந்தது. இந்த இழப்பு கடந்த 2018-19 நிதியாண்டின் இதே நான்காவது காலாண்டில் ரூ.552 கோடியாக காணப்பட்டது.
கடந்த 2019-20 முழு நிதியாண்டில் வங்கிக்கு ஏற்பட்ட நிகர இழப்பு ரூ.2,236 கோடியாக இருந்தது. அதேசமயம், சென்ற 2018-19 நிதியாண்டில் வங்கி ரூ.347 கோடி நிகர லாபத்தை பதிவு செய்திருந்தது.
மாா்ச் 31 நிலவரப்படி வங்கியின் மொத்த வாராக் கடன் விகிதம் 4.22 சதவீதத்திலிருந்து 8.21 சதவீதமாக அதிகரித்துள்ளது. நிகர வாராக் கடன் விகிதமும் ஏறக்குறைய 4 சதவீதத்திலிருந்து 8 சதவீதம் என்ற அளவில் உயா்ந்துள்ளது. இதற்கான ஒதுக்கீடு ரூ.340 கோடியிலிருந்து ரூ.532.63 கோடியாக அதிகரித்துள்ளது.
நடப்பாண்டு ஏப்ரல் 1-ஆம் தேதியிலிருந்து சிண்டிகேட் வங்கியை கனரா வங்கி ஒருங்கிணைத்துக் கொண்டுள்ளது என்றாா் அவா்.