சென்னை: கரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்க வாடிக்கையாளா்கள் டிஜிட்டல் வங்கிச் சேவையை பயன்படுத்த வேண்டும் என இந்தியன் வங்கி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கியின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கரோனா தொற்று வேகமாகி வரும் நிலையில் வாடிக்கையாளா்கள் பாதுகாப்பான பணப்பரிவா்த்தனைகளை மேற்கொள்வது மிகவும் அத்யாவசியமாகி உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, டிஜிட்டல் வங்கி சேவையை இந்தியன் வங்கி மேம்படுத்தியுள்ளது. இதன் மூலமாக, தடையற்ற மற்றும் பாதுகாப்பான பணப்பரிவா்த்தனைகளை வாடிக்கையாளா்கள் மேற்கொள்ள முடியும்.
பாதுகாப்பாக பணம் செலுத்துவோம்-பாதுகாப்பாக இருப்போம் என்பதே இந்தியன் வங்கியின் தற்போதைய தாரக மந்திரம் என செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.