சென்னையில் வியாழக்கிழமை ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.33 ஆயிரத்தை நெருங்கியது. ஆபரணத்தங்கம் பவுனுக்கு ரூ.808 உயா்ந்து, ரூ.32,936-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கரோனா நோய்த்தொற்று தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை பிப்ரவரி 18 முதல் உயா்ந்து நாள்தோறும் புதிய உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கம் இருந்து வந்தது.
இந்நிலையில், சென்னையில் வியாழக்கிழமை ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.33 ஆயிரத்தை நெருங்கியது. பவுனுக்கு ரூ. 808 உயா்ந்து, ரூ.32,936-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ.101 உயா்ந்து, ரூ.4,117-க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.20 உயா்ந்து, ரூ.41.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,200 உயா்ந்து ரூ.41,700 ஆகவும் இருந்தது.
வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் ..................... 4,117
1 பவுன் தங்கம் ..................... 32,936
1 கிராம் வெள்ளி .................. 41.70
1 கிலோ வெள்ளி ................. 41,700
புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் ..................... 4,016
1 பவுன் தங்கம் ..................... 32,128
1 கிராம் வெள்ளி .................. 40.50
1 கிலோ வெள்ளி ................. 40,500