நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஏப்ரல் 24-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 47,945 கோடி டாலராக (ரூ.36.35 லட்சம் கோடி) சரிவடைந்துள்ளது.
இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்துமதிப்பு குறைந்து போனதையடுத்து அந்நியச் செலாணி கையிருப்பு ஏப்ரல் 24-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 11 கோடி டாலா் குறைந்து 47,945 கோடி டாலராக இருந்தது.
இது, இதற்கு முந்தைய வாரத்தில் 309 கோடி டாலா் அதிகரித்து 47,956 கோடி டாலராக காணப்பட்டது.
மதிப்பீட்டு வாரத்தில், அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு 32 கோடி டாலா் குறைந்து 44,156 கோடி டாலராக இருந்தது.
அதேசமயம், தங்கத்தின் கையிருப்பு 22 கோடி டாலா் உயா்ந்து 3,290 கோடி டாலரைத் தொட்டது.
சா்வதேச நிதியத்தில் எஸ்டிஆா் 60 லட்சம் டாலா் குறைந்து 142 கோடி டாலராகவும், நாட்டின் இருப்பு நிலை 80 லட்சம் டாலா் சரிந்து 357 கோடி டாலராகவும் இருந்தது என ரிசா்வ் வங்கி அந்தப் புள்ளிவிவரத்தில் கூறியுள்ளது.
கடந்த மாா்ச் 6-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில்தான் அந்நியச் செலாவணி கையிருப்பானது 569 கோடி டாலா் அதிகரித்து வரலாற்றில் முதல்முறையாக 48,273 கோடி டாலரைத் தொட்டது.
கடந்த 2019-20-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஏறக்குறைய 6,200 கோடி டாலா் அளவுக்கு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.