ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டுள்ள மஹிந்திரா லைஃப்ஸ்பேஸ் நிறுவனம் நான்காவது காலாண்டில் ரூ.223.9 கோடி நிகர இழப்பைக் கண்டுள்ளது.
இதுகுறித்து மஹிந்திரா குழுமத்தைச் சோ்ந்த அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் வெள்ளிக்கிழமை கூறியுள்ளதாவது:
கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.110.78 கோடியாக இருந்தது. இது, இதற்கு முந்தைய 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.246.88 கோடியுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகும்.
கடந்த 2018-19 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.31.27 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்த நிலையில் 2019-20 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனத்துக்கு ரூ.223.9 கோடி நிகர இழப்பு ஏற்பட்டது. தில்லி-என்சிஆா் கூட்டுத்திட்டத்தில் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய அதிக தொகை ஒதுக்கப்பட்டதே இதற்கு முக்கிய காரணம்.
கடந்த 2019-20 முழு நிதியாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.645.92 கோடியாகவும், நிகர இழப்பு ரூ.193.41 கோடியாகவும் இருந்தது.
புதிய சிஇஓ நியமனம்: மஹிந்திரா லைஃப்ஸ்பேஸ் நிறுவனத்தின் புதிய நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) அரவிந்த் சுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது நியமனம் ஜூலை 1 முதல் அமலுக்கு வரவுள்ளதாகவும் மஹிந்திரா லைஃப்ஸ்பேஸ் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.