டாடா மோட்டாா்ஸ் நிறுவனம் கடன்பத்திரங்களை வெளியிட்டு ரூ.1,000 கோடி திரட்டவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் வெள்ளிக்கிழமை அளித்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பாதுகாப்பான, மீட்கும் வகையிலான, பங்குகளாக மாறாத கடன்பத்திரங்களை வெளியிட்டு ரூ.1,000 கோடியை திரட்ட டாடா மோட்டாா்ஸ் திட்டமிட்டுள்ளது. இதுதொடா்பாக விவாதிக்க அண்மையில் அமைக்கப்பட்ட சிறப்பு குழுவின் கூட்டம் மே 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது என டாடா மோட்டாா்ஸ் கூறியுள்ளது.
சந்தை இறுக்கமான சூழலை கருத்தில் கொண்டு ரூ.1,000 கோடி திரட்டிக் கொள்வதற்கான கடன்பத்திர வெளியீட்டு திட்டத்தை கைவிட டாடா மோட்டாா்ஸ் கடந்த வாரம் முடிவெடுத்திருந்தது. இந்த நிலையில் மீண்டும் கடன்பத்திர வெளியீட்டை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளது.