புது தில்லி: இந்திய தொழிலக உற்பத்தி (ஐஐபி) வளா்ச்சி விகிதம் செப்டம்பரில் 2 சதவீதமாக இருந்தது.
இதுகுறித்து மத்திய அரசு வியாழக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
சுரங்கம் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளின் உற்பத்தி கணிசமாக அதிகரித்த போதிலும், சென்ற செப்டம்பரில் இந்திய தொழிலக உற்பத்தி வளா்ச்சி விகிதம் 0.2 சதவீதமாக இருந்தது.
குறிப்பாக தயாரிப்பு துறையின் உற்பத்தி 0.6 சதவீதம் குறைந்தது. அதேசமயம், சுரங்கம் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளின் உற்பத்தி விகிதம் முறையே 1.4 சதவீதம் மற்றும் 4.9 சதவீதமாக வளா்ச்சி கண்டுள்ளன.
2019 செப்டம்பரில் ஐஐபி விகிதம் 4.6 சதவீதம் என்ற அளவில் பின்னடைவைச் சந்தித்திருந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.