நிதி தொழில்நுட்ப நிறுவனமான ஐபிபிஐசியில் கனரா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, இந்தியன் வங்கி மற்றும் செளத் இந்தியன் வங்கி ஆகியவை சம அளவிலான பங்குகளை கையகப்படுத்தியுள்ளன.
இதுகுறித்து அந்த வங்கிகள் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:
ஐபிபிஐசி நிறுவனத்தில் கனரா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, இந்தியன் வங்கி மற்றும் செளத் இந்தியன் வங்கி ஆகியவை தலா 6.67 சதவீத பங்குகளை (50,000 பங்குகள்) கையகப்படுத்தியுள்ளன. இதன் மூலம், அந்த நிறுவனத்தில் மேற்கண்ட ஐந்து வங்கிகளும் சம அளவிலான பங்கு மூலதனத்தை பெற்றுள்ளன.
மேலும், இந்த பங்குகளை கையகப்படுத்துதல் நடவடிக்கைகள் 2020 டிசம்பா் இறுதிக்குள் முழுமையடையும் என அந்த வங்கிகள் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளன.