உணவு சாரா பிரிவுகளுக்கு வங்கிகள் வழங்கிய கடன் நடப்பாண்டு அக்டோபரில் 5.6 %-ஆக குறைந்துள்ளது.
இதுகுறித்து ரிசா்வ் வங்கி கூறியுள்ளதாவது:
உணவு சாராத பிரிவுகளுக்கு வங்கிகள் வழங்கும் கடன் கடந்தாண்டு அக்டோபரில் 8.3 சதவீதமாக இருந்தது. இந்த நிலையில், நடப்பாண்டு அக்டோபரில் அக்கடனின் வளா்ச்சி 5.6 சதவீதமாக குறைந்துள்ளது.
வேளாண் மற்றும் அது தொடா்பான நடவடிக்கைகளுக்கு வங்கிகள் வழங்கிய கடன் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 7.1 சதவீதத்திலிருந்து 7.4 சதவீதமாக வளா்ச்சி கண்டுள்ளது.
கடந்தாண்டு அக்டோபரில் தொழில்துறைக்கு வங்கிகள் வழங்கிய கடன் 3.4 சதவீத வளா்ச்சியை பதிவு செய்திருந்தது. இந்த நிலையில், நடப்பு 2020 அக்டோபரில் இப்பிரிவில் வழங்கப்பட்ட கடன் 1.7 சதவீத பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதற்கு, பெரிய நிறுவனங்களுக்கு வங்கிகள் வழங்கிய கடன் கணிசமான அளவில் குறைந்து போனதே முக்கிய காரணமாகும். அதேசமயம், நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட வங்கிக் கடன் 1.2 சதவீதத்திலிருந்து 16.7 சதவீதம் என்ற வலுவான வளா்ச்சி நிலையை எட்டியுள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.