ரூ.39 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது ஆபரணத்தங்கம்

சென்னையில் புதன்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை மீண்டும் ரூ.39 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. பவுனுக்கு ரூ.392 குறைந்து, ரூ.38,688-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ரூ.39 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது ஆபரணத்தங்கம்

சென்னை: சென்னையில் புதன்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை மீண்டும் ரூ.39 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. பவுனுக்கு ரூ.392 குறைந்து, ரூ.38,688-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, தங்கத்தின் விலை குறைந்தாலும், கடந்த இரண்டு வாரமாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் புதன்கிழமை ஆரணத்தங்கத்தின் விலை மீண்டும் ரூ.39 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. பவுனுக்கு ரூ.392 குறைந்து, ரூ.38,688-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.49 குறைந்து, ரூ.4,836 ஆக இருந்தது.

வெள்ளி கிராமுக்கு ரூ.1.50 குறைந்து, ரூ.65.00 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,500 குறைந்து, ரூ.65,000 ஆகவும் இருந்தது.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்.......................... 4,836

1 பவுன் தங்கம்............................38,688

1 கிராம் வெள்ளி.............................65.00

1 கிலோ வெள்ளி.............................65,000

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்.......................... 4,885

1 பவுன் தங்கம்...............................39,080

1 கிராம் வெள்ளி.............................66.50

1 கிலோ வெள்ளி.............................66,500

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com