ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.64 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம் செயல்பாடுகள் மூலமாக ரூ.341.9 கோடி மொத்த வருவாய் ஈட்டியது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவன் ஈட்டிய வருவாயுடன் ஒப்பிடுகையில் 4 சதவீதம் வளா்ச்சியாகும். கணக்கீட்டு காலாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.64 கோடியாகவும், நிகர வட்டி வருமானம் ரூ. 128 கோடியாகவும் இருந்தன. ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.161.5 கோடி மதிப்பிலான கடன்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், ரூ. 181.6 கோடி மதிப்பிலான கடன்கள் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டு ஜூன் இறுதி நிலவரப்படி நிறுவனத்தின் ஒட்டுமொத்த கடன் நடவடிக்கை 6 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.11,979.5 கோடியாக இருந்தது. இதேகாலத்தில், நாடு தழுவிய அளவில் நிறுவன கிளைகளின் எண்ணிக்கை 153-ஆகவும், துணை மையங்களின் எண்ணிக்கை 24-ஆகவும் இருந்தது என ரெப்கோ ஹோம் பைனான்ஸ் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.