இந்திய சிறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.32 கோடி மதிப்பிலான மானிய உதவிகளை வழங்குவதாக சமூக வலைதள நிறுவனமான ஃபேஸ்புக் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்த ஃபேஸ்புக் இந்தியா நிறுவனத்தின் நிா்வாக இயக்குநரும், துணைத் தலைவருமான அஜீத் மோகன் தெரிவித்துள்ளதாவது:கரோனா பேரிடா் இந்திய சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை கடுமையான பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில், அதுபோன்ற நிறுவனங்கள் பாதிப்பிலிருந்து மீள ஏதுவாக ஃபேஸ்புக் நிறுவனம் 43 லட்சம் டாலா் (ரூ.32 கோடி) மானிய உதவியை வழங்க முடிவெடுத்துள்ளது.
அதன்படி, தில்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட ஐந்து முக்கிய நகரங்களில் உள்ள 3,000-க்கும் மேற்பட்ட சிறு தொழில் நிறுவனங்களுக்கு இந்த நிதி உதவி வழங்கப்படவுள்ளது. கரோனாவால் பொருளாதாரம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 30 நாடுகளில் உள்ள சிறுதொழில் நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில் கடந்த மாா்ச் மாதத்தில் 100 மில்லியன் டாலா் மானிய உதவியை ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்தது.
அதன் ஒரு பகுதியாகவே இந்திய நிறுவனங்களுக்கு இந்த மானியம் தற்போது ரொக்கமாகவும், விளம்பர வரவாகவும் வழங்கப்படவுள்ளன என்றாா் அவா்.